விஎச்பி நிர்வாகி மீது குற்றப்பத்திரிக்கை
சென்னை,அக்.1- அவதூறாக பேசிய வழக்கில் விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் துணைத் தலைவர் மணியன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் 2023 செப்டம்பரில் நடந்த கூட்டத்தில் திருவள்ளுவர், அம்பேத்கர் குறித்து விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் துணைத் தலைவர் மணியன் அவதூறாக பேசினார். இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.இதன்பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மணியனுக்கு எதிராக 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் 15 சாட்சிகள், 34 ஆவணங்களை இணைத்து காவல்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது.
ஆறுகளில் கழிவுநீர் கலப்பு
நீதிமன்றம் கேள்வி
மதுரை, அக். 1 - ஆறுகளில் கழிவுநீர் கலப் பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுகுறித்து மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றின் பாது காப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது, நீதி பதிகள் தாமாக முன்வந்து பல்வேறு துறை அதிகாரி களை எதிர்மனுதாரர்களாகச் சேர்த்துள்ளனர். அக்டோபர் 3-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கட்சிக்கொடி விவகாரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்
சென்னை, அக். 1 - நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என்று தெரி விக்கப்பட்டுள்ளது.
கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றிருப்பது குறித்து பகு ஜன் சமாஜ் கட்சி எழுப்பிய புகாருக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், கொடி விவகாரத்தில் தலையிடும் அதிகாரம் தனக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளது. தேர்தலின்போது யானை சின்னத்தைப் பயன்படுத்த முடியாது எனவும் குறிப் பிட்டுள்ளது.
துரைமுருகன் பதிலடி
சென்னை,அக்.1- மாநில நதிநீர் பிரச்சனையில் வெற்று அறிக்கைகளை வெளியிட்டு அதிமுக மக்களை குழப்ப வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
சிவகங்கை கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு இடைக்காலத்தடை
மதுரை,அக்.1- சிவகங்கை ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கரூர் மாவட்டம் உமையாள்புரம், மருதூர் பகு தியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்ப ணை கட்டவும் அதுவரை சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும் உத்தர விட வேண்டும் என்று வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு கூறுகையில் , சிவ கங்கை ஒருங்கிணைந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும், வழக்கு தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறையின் செயலர், தலைமைப் பொறியாளர், கரூர் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். அடுத்தக்கட்ட விசாரணை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.