குணச்சித்திர நடிகர் பிரதீப் விஜயன் மர்ம மரணம்
சென்னை, ஜூன் 13- தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பிரதீப் கே.விஜயன் (39) மர்மமான முறையில் மரணமடைந்தார்.
இந்த நிலையில், சென்னை பாலவாக்கம் சங்கராபுரம் முதல் தெருவில் உள்ள வீட்டில் அவரது உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. பிரதீப் வீட்டின் கதவு இரண்டு நாட்களாக பூட்டியிருந்ததாகவும், அவர் வெளியே வராமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவரது நண்பர்கள் அவருக்கு தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்த நிலையில், அவரிடம் எந்த விதமான பதிலும் கிடைக்காததால், அவர்கள் காவல் துறையை அணுகியுள்ளனர்.
பின்னர், காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் இறந்து கிடந்துள்ளார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இன்று மின்தடை
சென்னை, ஜூன் 13- வடசென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) வண்ணாரப்பேட்டை, மாதவரம் பகுதியில் பரா மரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வண்ணாரப்பேட்டை நார்த் டெர்மினல் ரோடு, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரி யன் நகர், நாகூரான் தோட்டம், பாலகிருஷ்ணன் தெரு, மீன்பிடிதுறைமுகம் , காலடிப் பேட்டை உள்ளிட்ட பலபகுதிகளில் மின் விநி யோகம் நிறுத்தப்படும்.
மாதவரம்: ஜி.என்.டி. ரோடு ஒரு பகுதி, கணபதி தோட்டம், வி.ஓ.சி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப் படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப் படும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
40 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
சென்னை, ஜூன் 13- சென்னையில் 40 ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு பணிக்குச் செல்ல மனுக்கள் கொடுக்கலாம் என டிஜிபி-யான சங்கர் ஜிவால் மற்றும் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் ஏற்கெனவேஅறிவிப்பு வெளியிட்டனர். இதையடுத்து சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய காவல் ஆணையர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த போலீஸார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனுக்களை அளித்தனர்.
அதன்படி சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து டிஜிபி-யும் சென்னை காவல் ஆணையரும் மூன்று நாட்களாக மனுக்களை பெற்றனர். இதன் தொடர்ச்சியாக முதல் கட்டமாக சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய காவல் மாவட்டங்களில் 40 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான புதிய பணியிடம் விரைவில் ஒதுக்கப்பட உள்ளது.
அம்பேத்கர் காலனியில் வாந்தி-மயக்கம்
கிருஷ்ணகிரி, ஜூன் 13- ஓசூர் மாநகராட்சி, 4 வது வார்டு சின்ன எலசகிரி, அம்பேத்கர் காலனியில் பெண்கள் உள்ளிட்ட 8 பேர் வாந்தி மயக்கம் என ஓசூர் அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் கோபிநாத், ஓசூர் மாநகர மேயர் சத்யா, ஆணையாளர் சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா,சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் நலம் விசாரித்தனர். பின்னர் மருத்துவர்களிடம் உரிய தீவிர சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தினார்.
அம்பேத்கர் காலனியில் விநியோகிக்கப்படும் குடிநீரால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, குடி தண்ணீரை ஆய்வு செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகர மேயர் சத்யா,ஆணையர் சினேகா உத்தரவிட்டனர்.
விபத்தில் தொழிலாளி பலி
கடலூர்,ஜூன்13 - கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள சேமக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சவரிமுத்து (52). கூலி தொழிலாளியான இவர், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டதில் சவரிமுத்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த எலந்தம்பட்டு பகுதியைச் சேர்ந்த வாலிபர் அஜித்குமார் (23) என்பவர் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற புதுப்பேட்டை போலீசார் விபத்தில் உயிரிழந்த சவரிமுத்து வின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் படுகாயமடைந்த அஜித்குமாரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். இது குறித்து புதுப்பேட்டை காவல் துறையினர வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.