tamilnadu

5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்....

சென்னை:
தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக் கையில் கூறியிருப்பதாவது:-

தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் இருந்து தமிழகத்தை நோக்கி வட காற்று தொடா்ந்து வீசுகிறது. இதனால், வெப்பநிலை உயா்ந்து வருகிறது. இதேநிலை அடுத்த இரண்டு நாள்களுக்கும் நீடிக்கும். குறிப்பாக, தமிழகத்தில் மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், சென்னை, கடலூா், காஞ்சிபுரம், செங்கல் பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 14 மாவட்டங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.இவ்வாறு கூறப் பட்டுள்ளது.

;