சென்னை, பிப். 16 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மத்திய சென்னை மாவட்டக் குழு உதயமானது. முன்னணியின் மத்திய சென்னை மாவட்ட அமைப்பு மாநாடு ஞாயிறன்ற (பிப்.16) சிந்தாதரிப்பேட்டையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், பாதாள சாக் கடைக்குள் மனிதர்களை இறக்குவதை தடை செய்வ தோடு, ரோபோக்களை பயன்படுத்த வேண்டும், நகரங்களை விட்டு பூர்வக் குடிகளை அகற்றப்படு வதை கைவிட வேண்டும், ஆதிதிராவிடர் கல்வி நிலையங்கள், விடுதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டிற்கு எம்.சண்மு கம், எம்.ஆர். மதியழகன், வி.தனலட்சுமி, எஸ். மனோண்மணி ஆகியோர் தலைமை தாங்கினர். சமூக செயற்பாட்டாளர் ஜி.செல்வா மாநாட்டை தொடங்கி வைத்தார். அறிக்கையை அமைப்பாளர் பி. சுந்தரம் சமர்ப்பித்தார். முன்னணியின் மாநிலச் செயலாளர் வி. ஜானகிராமன் மற்றும் எம். தயாளன், எஸ். பால சுப்பிரமணியம் உள்ளிட் டோர் பேசினர். முன்னணி யின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே. சுவாமி நாதன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
நிர்வாகிகள்
தலைவராக புகழேந்தி, செயலாளராக ப.சுந்தரம், பொருளாளராக எம்.சண்முகம் ஆகியோர் தேர்ந் தெடுக்கப்பட்டனர்.