சென்னை,செப்.12- 2030-ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டை 1 டிரில்லி யன் அமெரிக்க டாலர் பொ ருளாதாரமாக மாற்றிட வேண்டும் என்று உயரிய இலக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிர்ணயித்து, அந்த இலக்கை அடைவ தற்கான அனைத்து முன்னெ டுப்புகளையும் மேற் கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தி ற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்ப தற்காக முதலமைச்சர் அமெ ரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இப்பயணத்தின் போது, முதலமைச்சர் முன்னிலை யில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களு டன் 7,016 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட்டதோடு, உலக அளவில் பல்வேறு முன் னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 9 அன்று சிகா கோவில், கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் முதல மைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிறுவனம் கட்டுமா னம் மற்றும் சுரங்க கருவி கள், ஆஃப்-ஹைவே டீசல் மற்றும் இயற்கை எரிவாயு இயந்திரங்கள், தொழில் துறை எரிவாயு விசையாழி கள் மற்றும் டீசல்-எலக்ட்ரிக் இன்ஜின்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாகும்.
முதலமைச்சர் முன்னி லையில் கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 கோடி ரூபாய் முதலீட்டில், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் தற்போது உள்ள கட்டு மான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவு படுத்துவதற்கான புரிந்து ணர்வு ஒப்பந்தம் மேற்கொள் ளப்பட்டது.