சிபிஎம் கண்டனம்
கள்ளக்குறிச்சி, ஜூன் 11- மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டங்களில் ஈடுபடும் அரசியல் கட்சியினரை முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக காவல் துறையினர் கைது செய்யும்போது அவர்களின் விபரங்களை பதிவு செய்வது வழக்கம். இப்படி காவல்துறை பதிவு செய்யும் பதிவுத்தாளில் சாதி குறித்து குறிப்பிட வேண்டுமென இடம் ஒதுக்கி விபரம் கேட்பது உள்நோக்கம் கொண்டது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை: கடந்த 4ஆம் தேதி கொரோனா நிவாரணம் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கோரிக்கை இயக்கத்தில் சின்னசேலத்தில் பங்கேற்று கைது செய்யப்பட்டோம். அப்போது காவல் துறையினர் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விவரங்களை பதிவுத் தாளில் பதிவு செய்தனர்.
அதில் ஒவ்வொருவரின் சாதி குறித்து பதிவு செய்வதற்காக காவல் துறையினர் கேட்டபோது உடனடியாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப் பட்டவர்கள் சாதி குறித்து தெரி விக்க மறுத்தோம். மேலும் உடனடியாக கள்ளக் குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் கைப்பேசியில் இது குறித்து பேசிய போது “அது தவறுத லாக அச்சடிக்கப்பட்டு விட்டதாக” அவர் விளக்கம் தெரிவித்தார். பின்னர் கடந்த 9ஆம் தேதி இடது சாரிக் கட்சிகளின் போராட்ட இயக்கத் தில் திருக்கோவிலூரில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்ட போது அங்கும் இதே போன்று விவ ரங்களை பதிவு செய்யும் தாளில் சாதி குறித்து கேட்கப்பட்டிருந்தது. இது காவல் துறையினரும், உயர் அதிகாரி களும் கைது செய்யப்படுபவர்கள் மீது சாதி ரீதியான பல்வேறு உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள உதவும் வகையில் உள்ளது. இது கைது செய்யப்படும் அரசியல் கட்சியினரை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதோடு மன ரீதியாக துன்புறுத்தும் செயலாகவும் அமைந்துள்ளது. மேலும் இது சட்டவிரோதமான செயலாகும். எனவே மாவட்ட காவல்துறை கைது செய்யப்படுபவரின் விவரங்களை பதிவு செய்யும் தாளில் உள்ள சாதி என்ற விபரம் கேட்பதை நீக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.