tamilnadu

img

சாதியத்தை தகர்த்து மனித நேயத்தை வளர்ப்போம்: பேராசிரியர் கல்பனா

சென்னை, ஜூலை 27- சென்னை பெருநகரிலி ருந்து தலித் மக்களை வெளி யோற்றுவதை கைவிட்டு அந்த மக்கள் வசிக்கும் இடத்தின் அருகிலேயே குடியிருப்பை கட்டி கொடுக்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னனி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட சென்னை மாவட்ட 3வது மாநாடு சனிக்கிழமையன்று (ஜூலை27) ஆவடியில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.பால்சாமி தலைமை தாங்கினார். மாநிலத் துணை பொதுச்செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.  சென்னை ஐஐடி பேராசிரியர் கல்பனா கருணாகரன் தமது துவக்க உரையில்,“சாதியத்தின் தன்மையையும் பரிணா மத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். பாலினபாகு பாட்டிற்கு எதிராகவும், சாதியத்திற்கும், பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக போராட்டத்தை வீரியப்படுத்த வேண்டும்” என்றார். சாதி மறுப்பு, காதல் திருமணம் செய்வோரை படு கொலை செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுயசாதி பெருமையை நிலை நிறுத்த பெற்றோரே சொந்த மகளை கொல்லும் ஆணவக் கொலைகளும் சமீபகாலமாக அதி கரித்துள்ளது. தமிழ்நாட்டில் இடை நிலைச் சாதியை சேர்ந்த படித்த பெண்கள் எடுக்கும் முடிவை ஆணாதிக்கவாதிகளால் மறுக்கப்படுகிறது. சாதிய வன்மத்தையும் மத ரீதியான வன்மத்தையும், பெண்களுக்கு எதிராக கருத்துக்களை களைய வேண்டும். அதுவே சென்னையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பிரதானப் பணியாக இருக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மாவட்ட துணைத் தலைவர் மா.பூபாலன் வரவேற்றார். துணைத் தலைவர் கே.ராஜ்குமார் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்டச் செயலாளர் வி.ஜானகிராமன் வேலை அறிக்கையையும், பொருளாளர் எம்.ஆர்.மதியழகன் வரவு-செலவு அறிக்கையையும் சமர்பித்தனர்.  ஆவடி பகுதிக்குழு உறுப்பினர் அ.ஜான் நன்றி கூறினார்.

தீர்மானம்

அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளிட்ட மாநகராங்களில் தீண்டாமை கடைப்பிடிப்பதை தடுக்கும் நோக்கத் தில் கண்காணிப்பு குழுவை மாநில அரசே அமைக்கவேண்டும், தலித் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய சுகாதார மையங்களை அமைத்து க்கொடுக்க வேண்டும், சென்னையில் வாடகைக்கு வீடு கொடுப்பதில் தலித் மற்றும் இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் போக்கை தமிழக அரசு உண்மை அறியும் குழுவின் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டன.

நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக மா.பூபாலன், செயலாளராக வி.ஜானகிராமன், பொரு ளாளராக கே.ராஜ்குமார் உள்ளிட்ட 17 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது.