tamilnadu

img

ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தபெதிக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கண்ணதாசன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்தே ஆர்.என்.ரவி பிரச்சனைக்குரிய நபராக இருப்பதாகவும், பொது நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் மற்றும் இந்து கொள்கை பற்றியும், திராவிட கொள்கைகளுக்கு எதிராகவும் பேசி வருகிறதாகவும், தமிழக அரசு அனுப்பும் கோப்புகளில் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வருகிறதாகவும், இது பொதுமக்களின் நலனுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆரோவில் பவுண்டேஷன் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் எந்தவொரு லாபம் தரும் நிறுவனத்தின் தலைவராக இருக்கக்கூடாது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே, அவரை ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

;