சென்னை, ஆக. 11- எண்ணூர் அனல் மின் நிலையத்தில் பணி யாற்றும் ஊழியர்களை மின் பகிர்மான வட்டத்துக்கு மாற்றம் செய்ததை ரத்து செய்ய தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எண்ணூர் அனல் மின் நிலையம், 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூடப்பட்டது. அங்கு வேலை செய்து வந்த நிரந்தர ஊழியர்கள் சுமார் 600 பேரில் 470 பேர் அருகில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது வட சென்னை அனல் மின் நிலை யம் அலகு-1இல் 180 தொழிலாளர்களும், அலகு 2ல் 182 தொழிலாளர்களும் நிரந்தர மாக பணியாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள் ளது. வடசென்னை அனல்மின் நிலையம் விரி வாக்கம்-3ல் நிரந்தரமாக பணியாற்ற எண்ணூர் அனல்மின் நிலையத்தில் இருந்து 62 ஊழியர்களை பணிமாற்றம் செய்து தலைமை பொறியாளர் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், அந்த ஊழியர்களை சென்னை வடக்கு மின் பகிர்மான வட்டத்திற்கு தற்காலிக இடமாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதற்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். இது குறித்து எண்ணூர் அனல்மின் நிலைய அனைத்து தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பில், ஓய்வு பெற குறைந்த கால அளவே உள்ளதாலும், ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் வட சென்னை அனல் மின் நிலையத்திற்கு மட்டுமே இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது.