tamilnadu

img

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கால்வாய் தூர்வாரும் தொழிலாளர்கள்

கடலூர், நவ. 29- கடலூர் நகராட்சியில் பாதுகாப்பு உப கரணங்கள் இல்லாமல் கால்வாய் தூர்வா ரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப் பட்டனர். 45 வார்டுகளைக் கொண்ட கடலூர் நக ராட்சியில் 234 நிரந்தர துப்புரவு தொழி லாளர்களும், 100 ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். தற்போது மழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே ஏற்படும் அடைப்புகளை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.  வெள்ளிக்கிழமை பாரதி சாலையில் நக ராட்சி பூங்கா அருகே ஏற்பட்ட அடைப்பினை  சரிசெய்யும் பணியில் அதற்கான இயந்தி ரத்தை நகராட்சித் துறையினர் பயன்படுத்தி னர். ஆனால் அதனால் பலன் ஏற்படாத தைத் தொடர்ந்து அங்கிருந்த துப்புரவு பணி யாளர்களை சாக்கடை கால்வாய்க்குள் இறக்கி விட்டனர். சுமார் 5 அடி ஆழம் கொண்ட  அந்த கால்வாய்க்குள் அவர்கள் எந்தவித மான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லா மல் உள்ளே இறங்கி கழிவுகளை தங்களது  கைகளால் எடுத்து வெளியே போட்டனர்.  

சுமார் 1 டன் அளவிற்கான நெகிழி கழிவு கள் உட்பட பல்வேறு கழிவுகளை அப்புறப் படுத்தினர். நகராட்சி பொறியாளர்கள் முன்னி லையில் துப்புரவு பணியாளர்கள் எந்தவித உபகரணமும் இல்லாமல் பணியாற்றியது அந்த வழியாகச் சென்றவர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இதுகுறித்து தென்னாற்காடு மாவட்ட நகராட்சி தொழிலாளர்கள் சங்கத்தின் நிறு வனத் தலைவர் ச.சிவராமன் கூறுகையில்,  துப்புரவுப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்க ளுக்கு தேவையான கை உறைகள், காலுக்கான ஷூ வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்காமல் அவர்களை கால் வாய்க்குள் இறக்கக் கூடாது. குறிப்பாக மனி தன் நுழைவு குழிக்குள் இயந்திரம் மட்டுமே  பயன்படுத்த வேண்டும். அதனை மீறி மனி தரை உள்ளே இறக்கினால் அதற்கு பொறுப்  பான அலுவலர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடலூர் நகராட்சியில் நிதி நெருக்கடியை காரணம் காட்டி தொழிலாளர்களுக்கு சம்ப ளம் வழங்காததோடு, இதுபோன்ற பாது காப்பு உபகரணங்களும் போதுமான அள விற்கு வழங்கப்படுவதில்லை என்றார். இதுகுறித்து நகராட்சி ஆணையர் ராம மூர்த்தி கூறுகையில், தேவையான உபகர ணங்கள் இல்லாமல் துப்புரவு தொழிலாளர்  களை பணியில் ஈடுபடுத்தக் கூடாதென சுகா தார ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தி யுள்ளோம். நகராட்சியின் ஆணையராக அண்மையில்தான் பொறுப்பேற்றுள்ளதால் எவ்வளவு உபகரணங்கள் உள்ளன என்ற விபரம் தற்போது இல்லை. ஆனாலும் இது குறித்து விசாரிக்கப்படும் என்றார்.