முறைச்சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம் மாதம் 27 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தை விளக்கி முதலியார் பேட்டை வானொலி திடலில் பிரச்சாரம் நடைபெற்றது. சிஐடியு,ஏஐடியூசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் தா.முருகன், சீனுவாசன், அபிஷேகம்,சேதுசெல்வம், மோதிலால் ஆகியோர் உரையாற்றினர்.