சென்னை,மே1- தமிழகத்தில், ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், அரசு பேருந்துகள் இயக்கப்படாது’ என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர்.
தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள், இன்னும், பச்சை மண்டல பகுதிகளாக மாற வில்லை. இந்நிலையில், பச்சை மண்டல பகுதி களில் மட்டும், நிபந்தனைகளுடன் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. பொதுப் போக்குவரத்துக்காக, அரசு பஸ்களை இயக்குவ தில், தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீடிக்கும். நிபந்த னைகளுக்கு உட்பட்டு இயங்கும் தொழிற்சாலைக ளுக்கு, வாடகை அடிப்படையில், 100 கி.மீ., சுற்றள வுக்குள் வசிக்கும் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வகையில், அரசு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். அரசின் உத்தரவுகளை மதித்து, முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே, பஸ்களை இயக்க உள்ளோம்.
அரசு, எப்போது பொதுப் போக்குவரத்தை அனுமதித்தாலும், இயக்கும் வகையில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.