tamilnadu

img

பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், ஜூலை 11- பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஆண்டுக் கணக்கில் தேங்கிக் கிடக்கும் மருத்துவக் கட்ட ணம், காலதாமதமாக வழங்கப்படும் மருத்து வப்படி ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி  அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கடலூர் பொதுமேலாளர் அலு வலகம் அருகே மாவட்டத் தலைவர் என்.மேகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலர் எம்.மதியழ கன், சங்கத்தின் மாநில உதவிச் செயலாளர் எஸ்.முத்துக்குமாரசாமி, மாநில துணைத் தலைவர் பி.மாணிக்கமூர்த்தி ஆகியோர் பேசி னர். பிஎஸ்என்எல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.டி.சம்பந்தம், தமிழ்  நாடு தொலைதொடர்பு சங்க மாவட்டச் செய லர் கே.விஜய்ஆனந்த் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட உதவி செயலர் ஏ.அண்ணா மலை நன்றி கூறினார்.