tamilnadu

img

மூடப்பட்ட தொட்டியில் விழுந்த சிறுவன் பலி

சென்னை:
பல்லாவரம் அருகே மூடப்படாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்த 6 வயது சிறுவன் உயிரிழந்தான்.சென்னை பல்லாவரத்தை அடுத்த நெமிலிச்சேரி ரங்கநாதன் தெருவில் வசிக்கும் செல்வராஜ் என்பவரின் நான்காவது மகன் சந்தோஷ் குமார்(6). இவர் தனது அண்ணன், அக்காவுடன் வீட்டருகே புதிதாக கட்டிவரும் கட்டடத்தில் மூடப்படாமல் இருந்த 12 அடி தண்ணீர் தொட்டியின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, சிறுவன் எதிர்பாராதவிதமாக அந்தத் தொட்டியில் விழுந்துள்ளார். இதைக்கண்ட அவனுடைய அக்காவும் அண்ணனும் தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலறிந்து அங்கு உடனடியாக வந்த அக்கம்பக்கத்தினர், தொட்டிக்குள் குதித்து சிறுவனை மீட்டு சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் தண்ணீர் அதிக அளவில் குடித்து மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளான். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்து
வர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த சிட்லப்பாக்கம் காவல்துறையினர், சிறுவனின் உடலை உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;