தே.இலட்சுமணன் எழுதிய “அவனின்றி எல்லாம் அசைகின்றன’’ என்ற நூலை சென்னையில் பேராசிரியர் அருணன் வெளியிட்டார். அதனை சென்னை மக்கள் மேடை ஒருங்கிணைப்பாளர் ஜி.செல்வா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ்.பாலா, இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.எல்.ஸ்ரீதரன், தமுஎகச தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரவீந்திரபாரதி, பாரதி புத்தகாலய பதிப்பாளர் க.நாகராஜன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.