முற்போக்கு சிந்தனையாளர் ம.சிங்காரவேலர் நினைவை போற்றும் வகையில் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் படிப்பகம் சார்பில் எண்ணூரில் புத்தகத்திருவிழா நிகழ்வு கத்திவாக்கம் கடைவீதியில் நடைபெற்றது. இதில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தொழிற்சங்கத் தலைவர் வீரஅருண், படிப்பக தலைவர் ச.ஹரிஹரன், காமராஜ் துறைமுகம் பொதுமேலாளர் ஏ.கருப்பையா, வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் எச்.ரியாசுதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.