சென்னை:
வேல் யாத்திரையின் போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறிசெயல்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத் தில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.தமிழக பாஜக சார்பில் வேல் யாத்திரை திருத்தணியில் நவம்பர் 6 ஆம்தேதி தொடங்கி டிசம்பர் 6 ஆம் தேதி திருச்செந்தூ ரில் முடிவடையும் என்று பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், கொரோனா தொற்று பரவல் உள்ளதால் பாஜகவின் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. இதையெல்லாம் கொஞ்சம் கூட மதிக்காமல் திருத்தணியில் யாத்திரை செல்ல முயன்ற பாஜக மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வேல் யாத்திரையின் போது பாஜகவினர் காவல்துறையினரிடம் அத்துமீறி செயல்பட்டதாக டி.ஜி.பி தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து டி.ஜி.பி தரப்பில் வாதிடுகையில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பல இடங்களில் முறையாக முகக்கவசம் அணியவில்லை. மத்தியில் ஆளும் பாஜகவினர் பொறுப்பை உணராமல் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுகின்றனர். வேல் யாத்திரை, கோவில் யாத்திரை அல்ல; முழுக்க முழுக்கஅரசியல் யாத்திரையே.நவம்பர் 6ஆம் தேதி பாஜகவினர் தடையை மீறி ஊர்வலம் சென்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.