tamilnadu

img

பாஜக அரசின் கரும்புள்ளிகள் நூல் வெளியீட்டு விழா

தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் டாக்டர் சி.எஸ். ரெக்ஸ் சற்குணம் எழுதிய ‘பாஜக அரசின் கரும்புள்ளிகள் - கோவிட் 19 வெறுப்பு அரசியல்’ எனும் நூல் வெளியீட்டு விழா வியாழனன்று (ஏப்.11) சென்னையில் நடைபெற்றது. நூலை எழிலன் நாகநாதன் எம்எல்ஏ வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத்தின் செயலாளர் ஞானகுரு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூலாசிரியர் டாக்டர் சி.எஸ். ரெக்ஸ் சற்குணம், நல்வாழ்வு இயக்கத்தின் பொருளாளர் பா.கருணாநிதி, செயற்குழு உறுப்பினர் ப.தேவி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.