தாம்பரம்,பிப்.10- பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் லியாஸ் தமிழரசன்(24) என்பவர் 10க்கும் மேற்பட்ட பெண்களை காதலிப்பதாக ஏமாற்றி வீடியோ எடுத்து பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் சேலையூர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அவரது செல்போன்கள், லேப்டாப்பை பறிமுதல் செய்து விசாரித்ததில் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் இதுவரை ரூ.50 லட்சத்திற்கும் மேல் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்துள்ளது.