“பாஜகவுக்கு மக்களைப் பற்றி அக்கறை இல்லை. மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. ஆனால், இந்துக்கள் மற்றும் இந்து மதத்தின் மீதும் கூட அக்கறை இல்லை. மீனவா்கள், விவசாயிகள், ஒடுக்கப்பட்ட -பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக சட்டங்களைக் கொண்டு வந்துள்ள பாஜக, மக்களைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை. பாஜகவைச் சோ்ந்த 44 எம்பிக்கள் மீது பெண்களுக்கு எதிரான வழக்குகள் உள்ளன. மக்களை பாஜக ஏமாற்றிக் கொண்டிருக்கிறது” என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி விமர்சித்துள்ளார்.