tamilnadu

விதிமுறைகளை மீறி பாஜகவினர் வாக்கு சேகரிப்பு

அவிநாசி, டிச. 27- அவிநாசி அருகே எலச்சிபாளையம் பகுதியில் அரசு அலுவலகங்கள், மின்கம்பம், குடிநீர் தொட்டிகளில் பாஜக வேட்பாளர் விதியை மீறி விளம்பரத் தட்டிகள் வைத்திருப்பதை தேர்தல் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சி உட்பட்ட  எலச்சிபாளையம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தலை யொட்டி வேட்பாளர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு பணி யில் தீவிரம் காட்டி வருகின்றனர். இச்சூழலில் அரசு அலுவ லகங்கள் உள்ளிட்ட அரசுக்குச் சொந்தமான கட்டிடங்கள் மற்றும் மின்கம்பம், குடிநீர் தொட்டி உள்ளிட்ட இடங் களில் விதிகளை மீறி பாஜக வேட்பாளரின் வாக்கு  சேகரிக்கும் பிளக்ஸ் பேனர்கள், தட்டிகள்  வைக்கப் பட்டுள்ளன. இதுதொடர்பாக, அவிநாசி தேர்தல் ஆணைய  அதிகாரிகளிடம் பிற அரசியல் கட்சியினர், பொதுமக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. ஆகவே, மாவட்ட தேர்தல் அதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கோரிக்கை எழுந்துள்ளது.

;