அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் சட்ட மசோதா இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பதற்கான சட்ட முன்வடிவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தாக்கல் செய்தார். அந்த மசோதாவின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறும் பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் அண்ணா தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் தனியாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.