tamilnadu

img

திருவான்மியூர்-உத்தண்டி இடையில் உயர்மட்ட சாலை பணி தீவிரம்

சென்னை,ஆக.20- சென்னையின் முக்கிய சாலையாக கிழக்கு கடற் கரை சாலை உள்ளது. திரு வான்மியூர் முதல் அக்கரை வரை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கியது. இதற்கு ரூ.940 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணி கள் நடைபெற்று வருகின் றன.

திருவான்மியூர், கொட்டி வாக்கம், பாலவாக்கம், நீலா ங்கரை, ஈஞ்சம்பாக்கம், மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் நில எடுப்பு பணி 15 பகுதிகளாக பிரிக்கப்பட்டு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வரு கிறது.

6 வழிச்சாலையாக அகல ப்படுத்துவதற்கு கொட்டி வாக்கம் பகுதியில் ரூ.19 கோடியில், பாலவாக்கம் பகுதியில் ரூ.18 கோடியில், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் ரூ.135 கோடியில் பணிகள் நடைபெற்று வரு கின்றன. இந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலை யில் 6 வழி சாலை பணியை  வேகப்படுத்தும் ஆய்வு கூட்டம் அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் அக்கரை சந்திப்பில் சாலை யோரம் நடைபெற்றது. 

அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

போக்குவரத்து நெரி சலை கருத்தில் கொண்டு திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை அமைப்பதற்கு கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசு பரிசீலனை செய்து வருகிறது. உயர்மட்ட பாலம் டைடல் பூங்கா சந்திப்பில் தொடங்கி எல்பி சாலை சந்திப்பு, நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், அக்கரை வழியாக உத்தண்டியில் முடிகிறது.

இப்பகுதி மக்களின் தேவையை கருத்தில் கொண்டு எல்.பி. சாலை சந்திப்பு, திருவான்மியூர் ஆர்.டி.ஓ. அலுவலகம்,  நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், மற்றும் அக்கரை சந்திப் பில் பாலத்தில் ஏறி, இறங்கி செல்லும் வகையில் வடி வமைப்பு செய்யப்படும்.

இந்த பாலத்தின் மூலம் இப்பகுதியை 20 நிமிடங் களில் கடக்க முடியும். கிழக்கு கடற்கரை சாலை யில் நடைபெறும் 6 வழித்தட பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற் குள் முடியும்.

நில எடுப்பு செய்த இடங்க ளில் வடிகால்வாய் அமைக் கும் பணிகள் முடிந்து உள்ளன. இப்பணிகள் முடிந்த இடங்களில் மின் வாரிய உபகரணங்களை மாற்றி அமைக்கும் பணிகள்  நடைபெறுகிறது. இந்த பணி முடிந்ததும் குடிநீர் குழாய் மற்றும் பாதாள கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி கள் இருபுறமும் நடை பெறும்.

அண்ணாசாலையில் இரும்பு மேம்பாலம் பணிக்கு  மண் பரிசோதனை நடக்கி றது. கீழே மெட்ரோ ரயில் பாதை உள்ளது. அதற்கு ஏற்ப வடிவமைப்பு செய்து உள்ளோம். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அண்ணா சாலை மேம்  ்பாலம் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.