சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் கிறிஸ்துமஸ் சீசன் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. இதை முன்னிட்டு மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரம் திங்களன்று நிறுவப்பட்டது. 200க்கும் மேற்பட்ட டியூப் லைட்டுகளை கொண்டு இந்த மரம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் எக்ஸ்பிரஸ் அடிப்படை கட்டமைப்பு நிறுவன தலைவர் சரோஜ் கோயங்கா,எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாக இயக்குநர் கவிதா சிங்கானியா,சென்னைக்கான ஸ்பெயின் நாட்டின் கவுரவத் தூதர் அந்தோனி லோபோ, தாய்லாந்து நாட்டின் தூதர் நிட்டிரூகி போன்பிரிசெர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.