சென்னை பல்கலைக்கழகத்தின் தடையை மீறி, பிபிசி வெளியிட்ட குஜராத் கலவரம் குறித்த ‘இந்தியா - மோடிக்கான கேள்விகள்’ எனும் ஆவணப்படம் பல்கலைக்கழக வளாகத்தில் திரையிடப்படும் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிபிசி-யின் ஆவணப்படத்தை ஒன்றிய பாஜக அரசு குறுக்கு வழியில் தடை செய்துள்ளது. இதனைக் கண்டித்தும், தடை செய்யப்பட்ட படத்தை நாடு முழுவதும் சமூக வலைத்தளங்கள் வழியாக மக்களிடம் சமூக செயற்பாட்டாளர்கள் கொண்டு சென்று வருகின்றனர். தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் பெயர்களில், ஆவணப் படத்தை இணையதளங்களில் நெட்டிசன்கள் பதிவேற்றி வருகின்றனர். இதனால் பாஜகவினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று ஆவணப்படம் திரையிடப்படும் என்று இந்திய மாணவர் சங்கம் அறிவித்திருந்தது. அதற்கு பல்கலைக் கழக நிர்வாகம் தடைவிதித்துள்ளது. தடையை மீறி பிற்பகல் 3 மணி அளவில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.