“ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியை ஆதரிப்பதுதான் பாமக. பாஜகவுக்கு பூஜ்யம் மதிப்பெண் தருவதாக கூறிவிட்டு, இப்போது அங்கேயே கூட்டணி ராமதாஸ் வைத்துள்ளார். வேடந்தாங்கல் பறவை மாதிரி அடிக்கடி கூட்டணி மாறுகிறவர் அன்புமணி ராமதாஸ். வேடந்தாங்கல் பறவைகள், ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது வரும். தண்ணீர் வற்றினால் போயிடும். அது மாதிரிதான் அவர்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாமகவை விமர்சித்துள்ளார்.