tamilnadu

img

கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி கைது!

கிழக்கு பதிப்பக உரிமையாளரும், வலதுசாரி ஆதரவாளருமான  பத்ரி சேஷாத்ரி, சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார். 

யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய பத்ரி சேஷாத்ரி, மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும், அவரிடப் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த நிலையில் வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர், இன்று காலை பத்ரி சேஷாத்ரியை சென்னையில் வைத்து கைது செய்தனர்.

அவர் மீது ஐபிசி 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுவது), 153-ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகையை வளர்ப்பது, மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்), 505 (பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அறிக்கைகள்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.