tamilnadu

அட்டைப் பெட்டியில் குழந்தையின் உடல்: பிணவறை ஊழியர் பணியிடை நீக்கம்

சென்னை, டிச. 11- சென்னை கீழ்ப்பாக்கத்தில் இறந்த குழந்தையின் உடலை அட்டை பெட்டியில் வைத்து கொடுத்த விவகாரத்தில் ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கன்னிகா புரத்தைச் சேர்ந்த மசூத் - சவுமியா தம்பதிக்கு கடந்த டிச. 5 அன்று குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. இந்த குழந்தையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் மசூத் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் டிச.10 அன்று குழந்தையின் உடலை அடக்கம் செய்வதற் காக அட்டைப் பெட்டியில் வைத்து மசூத்திடம்  மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்துள் ளது. மேலும் ரூ.2500  லஞ்சம் கேட்டதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து செய்தி வெளி யான நிலையில் பொதுமக்களிடம் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்கு நர் சங்குமணி கூறுகையில், குழந்தை இறந்தே பிறந்த நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.  அந்த குழந்தையை அட்டை பெட்டியில்  வைத்து கொடுத்தது தொடர்பாக பன்னீர்செல் வம் என்னும் பிணவறை உதவியாளர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இனிமேல்  இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சுகாதாரத்துறை அமைச்சர் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். 

தற்போது அந்த ஊழியர் தற்காலிக பணி யிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேல் அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக மெமோ வழங்கப்பட்டுள்ளது. ரூ.2,500  லஞ்சம் கேட்கப்பட்டது என்று கூறுவது உண்மை இல்லை. இறந்த உடலை ஒப்படைப்பதற்கு என்று சில வழிமுறைகள் உள்ளன. அது மீறப்பட்டுள்ளது. பிணவறை உதவியாளர் பன்னீர்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் தெரிவித்தார்.