பாலினச் சமத்துவம், பகுத்தறிவு, சமூகநீதி, சாதியொழிப்பு, அறி வியல் மனப்பாங்கு சார்ந்த பாடல்களைக் கொண்டு இசைநிகழ்ச்சிகளை நடத்திவரு கிறது நீலம் பண்பாட்டு மையத்தின் ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழு.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்குள்ள வழிபாட்டு உரிமையை அங்கீகரித்து உச்சநீதிமன்றம் 2018 அக்டோபரில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சங் பரிவாரக் கும்பல் ரகளை செய்துவந்த நிலை யில், அத்தீர்ப்புக்கு வலுசேர்க்கும் விதமாக இக்குழுவின் அப்போதைய நிகழ்வொன்றில் “ஐயாம் ஸாரி ஐயப்பா” என்கிற பாடலை இசைவாணி பாடினார்.
ஐயப்பன் அவமதிக்கப்படவில்லை
பழங்குடிகளின் தொல்தெய்வம்தான் பின்னாளில் ஐயப்பனாக மாற்றப்பட்டு இந்து மதக் கடவுளெனத் திரிக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருக்க, ஐயப்பனை பல்சமயத்த வரும் நல்லிணக்கத்துடன் வழிபடுகின்றனர். 1960கள் வரை கோவிலுக்குள் சென்று வழிபடு வதற்கு வயது வரம்பின்றி எல்லாப் பெண்களும் பெற்றிருந்த உரிமை மறுக்கப்பட்ட நிலை யிலேயே உரிமைமீட்புக்கான கோரிக்கையும் போராட்டமும் எழுந்தன. அதன் தொடர்ச்சியில் வெளியான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, கேரள அரசின் உறுதிப்பாடு, லட்சக்கணக் கான பெண்கள் நடத்திய மனிதச்சுவர் போராட்டம் ஆகியவற்றால் உத்வேகம் பெற்றும் அதன் நியாயத்தை வலியுறுத்தி யும் தொடங்கும் இப்பாடலில் ஐயப்பனோ வேறெந்த தெய்வமோ அவமதிக்கப்பட வில்லை.
சங் பரிவாரத்தின் மிரட்டல்
பெரியாரின் பேத்தியாக உருவகித்துக் கொள்ளும் ஒரு பெண், வழிபாட்டுரிமை உள்ளிட்ட பாலினச்சமத்துவத்தை வலி யுறுத்துவதாக அமைந்துள்ள இந்தப்பாடல் கடந்த ஆறாண்டுகளாக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் திடீரென இப்போது தங்களது மனதைப் புண்படுத்தி விட்டதாக சங்பரிவாரக் கும்பலைச் சேர்ந்த வர்கள் இசைவாணியை அலைபேசியில் அழைத்து மிரட்டியும் ஆபாசமாக பேசியும் வரு கின்றனர். அவரை அழைத்துத் திட்டுவதற்கும் மிரட்டுவதற்கும் மற்றவர்களைத் தூண்டி விடும் கெடுநோக்கில் அவரது அலைபேசி எண்ணை சமூக ஊடகங்களில் பரப்பிவரு கின்றனர். அவரது உருவப்படத்தை ஆபாச மாகச் சித்தரித்து அவருக்கு அனுப்பி சமூக ஊடகங்களில் பரப்பப்போவதாக மிரட்டி வருகின்றனர். இந்த வக்கிரக் கும்பல் குறித்த விவரங்களுடன் இசைவாணி காவல்துறையில் புகார் கொடுத்தும் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல.
இணையக் கூலிப்\ படையின் வக்கிரம்
‘ஐயாம் ஸாரி ஐயப்பா’ பாடலின் உட்பொருள் எழுப்பும் இந்த நியாயத்தை எதிர்கொள்ள திராணியற்ற சங்பரிவாரத்தினர், இசைவாணி வேறு மதத்தவர் என்கிற பொய்யைச் சொல்லி, அந்த மதத்தைச் சேர்ந்த இவர் இந்துமதக் கடவுளை இழிவு படுத்திவிட்டார் என்று மதரீதியான மோதலைத் தூண்டும் இழிசெயலிலும் இறங்கியுள்ளனர். இந்தப் பொய்களையே முன்னிறுத்தி இசை வாணி மீதும் நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் இயக்குநர் பா.ரஞ்சித் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்களையும் கொடுத்து வருகின்றனர். பெண்களைத் தெய்வமாகப் போற்றுவதாக பீற்றிக்கொண்டே ஒரு பெண் கலைஞரை இவ்வாறு வக்கிர மாக சித்தரித்து அச்சுறுத்தியும் அவதூறு செய்தும் வருகின்றனர் இணையக் கூலிப்படை யினர். ஆளுநர் என்ற அரசியல் சாசனப் பொறுப்பை வகித்த தமிழிசையும் இதேரீதி யில் பேசுவது வெட்கக்கேடானதும், அரசியல் சாசனத்தை அவமதிப்பதுமாகும்.
உரிமை மறுக்கப்பட்ட பெண்கள் இந்துக்கள் இல்லையா?
பெண்கள் வழிபாட்டுரிமையைக் கோரினாலே இந்துக்களின் மனம் புண்பட்டு விடும் என்றால் இவ்வளவு காலமும் வழிபாட்டு ரிமை மறுக்கப்பட்டுள்ள பெண்கள் இந்துக்கள் இல்லையா, அவர்களது மனம் புண்படாதா என்கிற கேள்விகள் எழுகின்றன. இந்தப் போக்கை அனுமதித்தோமானால், சமூகத்தின் எல்லா நிலைகளிலும் நிலவும் ஏற்றத்தாழ்வை விமர்சிப்பதையும் சமத்து வத்தைக் கோருவதையுமே கூட தங்களது மனதைப் புண்படுத்தும் செயல் என்று பழமை வாதிகள் கொக்கரிக்கக்கூடும். எதற்கெடுத்தா லும் மனம் புண்பட்டதாகக் கூறிக்கொண்டு பரபரப்பையும் பதற்றத்தையும் உருவாக்கி சமூகத்தை அமைதியின்மையில் மூழ்கடித்து கவனக்குவிப்பு பெறும் மலிவான முயற்சியில் ஈடுபடுகின்ற சங்பரிவார கும்பல் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வலுவாக குரல் எழுப்புவோம்!
சுதந்திரமான கலைச் செயல்பாட்டிற்கு அச்சுறுத்தலை உருவாக்குவதன் மூலம் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் சுய தணிக்கைக்குள் முடக்கி மழுங்கடிக்கப் பார்க்கும் சங்பரிவாரத்தின் இழிமுயற்சி களை முறியடித்தாக வேண்டும். ஆக்கப்பூர்வ மான விவாதக்களமாக இருக்கவேண்டிய பொதுவெளியை இப்படி மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் அவதூறுகளாலும் ஆபாசங்களா லும் தனிமனித தாக்குதல்களாலும் நிறைக்கும் சங்பரிவாரத்தின் போக்குக்கு எதிராக ஜன நாயகத்திலும் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்தி ரத்திலும் நம்பிக்கையுள்ளவர்கள் குர லெழுப்ப வேண்டும்.
இசைவாணி எந்த மதத்தவராக இருந்த போதிலும் வழிபாட்டுரிமை உள்ளிட்டு பாலினச் சமத்துவத்தைக் கோருவதற்கு அர சியல் சாசனப்படியும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படியும் அவருக்குள்ள உரிமையினைப் பாது காக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என தமுஎகச வலியுறுத்துகிறது.
தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா
ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை