தகவல் தொழில்நுட்பம் வாயிலாக அரசு சேவைகள் விழிப்புணர்வு அமைச்சர் தகவல்
சென்னை,டிச.21- தகவல் தொழில்நுட்பம் வாயிலாக அரசின் பல்வேறு சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகை யில் வரும் ஜனவரி மாதத்தில் ஒருவாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் உட்கட்டமைப்பை கிராமப்புற மக்களுக்கு வழங்கு தல், மாநிலத்தை தொழில் முனைவு மையமாக மாற்றுதல், நவீன செயலிகள், வலைத்தளங்கள் உருவாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை ‘தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூ கம்’ செயல்படுத்துகிறது. இந்த டிஜிட்டல் திட்டங்கள் தொடர்பாக வரும் 2025 ஜனவரி மாதத்தில் ஒருவாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது என்று தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
விபத்தால் மேட்டூரில் மின் உற்பத்தி குறைவு
மேட்டூர்,டிச.21- மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிகழ்ந்த விபத் தால் மின் உற்பத்தி பெரு மளவு குறைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 1,440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் நிலையில், 180 மெகாவாட் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, அனல் மின் நிலை யத்தில் 87 சதவீதம் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13 சதவீதம் மட்டு மே நடந்து வருகிறது தமிழ்நாடு மின் உற் பத்தி மற்றும் பகிர்மான கழக த்துக்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலை யத்தில் 2 பிரிவுகள் உள்ளன.
3 ஆவது அலகில் இருந்து 4-வது அலகுக்கு செல்லும் குடிநீர் குழாய், ஆயில் குழாய் உள்ளிட்டவை உடைந்துள்ளது. 600 மெகா வாட் திறன் கொண்ட 2-வது பிரிவில் டிசம்பர் 21 அன்று காலை கொதிகலன் டியூப் வெடித்ததையடுத்து மீண்டும் மின் உற்பத்தி பாதிக் கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் ஊழியர் கள் ஈடுபட்டுள்ளனர்.
‘35 சதவீத எலெட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி’
சென்னை,டிச.21- அழகப்பா தொழில் நுட்பக் கல்லூரியின் 80 ஆம் ஆண்டு விழா, சென்னை அண்ணா பல்கலைக்கழ கத்தில் உள்ள விவேகானந் தா கூட்டரங்கில் நடை பெற்றது. இதில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்று உரையாற்றினார். அப்போது அமைச்சர் பேசுகையில், “இந்தியாவின் பொருளாதாரத்தில் முதன் மை மாநிலம் மகாராஷ்டிரா என்பது பொய்யான தகவல். மும்பையை எடுத்துவிட்டால் அங்கு ஒன்றுமில்லை. தமிழ்நாடுதான் முதன்மை மாநிலம். பெண்கள் அதிக ளவில் 43 சதவீதம் தமிழ்நாட் டில் தான் வேலைக்கு செல் கிறார்கள். ஆட்டோமொபைல் உற் பத்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. நம் முடைய உற்பத்தியை உல கத் தரத்திற்கு கொண்டு செல் வது இன்றைய மாணவர்கள் கையில் உள்ளது. 35 சதவீ தம் எலெட்ரானிக்ஸ் பொருட் கள் தமிழ்நாட்டில் தயாரிக் கப்பட்டு ஏற்றுமதி செய்யப் படுகிறது என்று கூறினார்.
ஆன்லைன் ரம்மியால் இளைஞர் தற்கொலை
சென்னை,டிச.21- ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிரிழந்துள்ள சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதனால் உயிர்ப்பலிகளும் தொடர்கின்றன. சென்னை சைதாப்பேட்டை சின்னமலை, ஆரோக்கிய மாதா நகர், இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (26). ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு முடித்து விட்டு அவ்வப்போது கேட்டரிங் தொடர்பான வேலை பார்த்து வந்துள்ளார். இவரது தந்தை தேவராஜ் கிரி கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். தாய் மோத்தி மற்றும் அண்ணனுடன் வசித்து வந்தவர் ஆன்லைன் ரம்மி விளையாடு வதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆகாஷ், தாயின் புற்றுநோய் சிகிச்சை செலவுக்காக வைத்திருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். இதனால் அவரது தாய் மற்றும் அண்ணன் ஆகியோர் ஆகாஷை கடிந்துகொண்டதாக கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த ஆகாஷ் நேற்று மாலை முதல் வீட்டுக்கு வராமல் இருந்துள் ளார். இதனால் ஆகாஷின் தாயும் அண்ணனும் தேடினர். இரவும் காணாததால் அதிகாலை 3:30 மணிக்கு ஆகாஷின் அண்ணன் மொட்டை மாடிக்கு சென்று பார்த்தபோது அங்கே அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் கோட்டூர்புரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆகாஷின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆகாஷின் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.