tamilnadu

சூரிய மின்சக்தி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை, ஜன. 16- பிளட்ஜ் ஃபார் சோலார் சூரிய மின்சக்திக்கு உறுதியேற்பு என்ற விழிப்புணர்வு பிரச்சாரம்  தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிறுவனமாகிய டாடா சோலார் பவர் நிறுவனம் இந்த பிரச்சாரத்தை துவங்கியுள்ளது. இந்த பிரச்சாரத்தின் மூலம் நுகர்வோருக்கு குடியிருப்பு பகுதிகளில் சூரிய மின்சக்தி கூரை மற்றும் இயற்கை வளங்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு உருவாக்க முனைந்துள்ளது.  இந்த பிரச்சாரத்தை திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் சிஷா ஜே.பி சைமன், தொழில் முனைவோர்  டி தமிழ்செல்வன்,தலைமை பொறியியாளர் நஸ்ரூதீன் ஆகியோர் திருச்சியில் கொடியசைத்து துவங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியார் நிறுவன உயர்அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் 55 நகரங்களில் வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரம் 48 நகரங்களில் நடைபெறவுள்ளது. நுகர்வோர்கள் தூய்மையான மற்றும் பசுமையான மின் ஆற்றல் தீர்வை நோக்கி செல்ல இந்த பிரச்சாரம் இயக்கம் உதவும் என்று டாடா பவர் நிறுவன மேலாண்மை இயக்குநர் ப்ரவீர் சின்ஹா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

;