சென்னை விஐடியில் நாட்டு நலப்பணித்திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாணவர்களுக்கு தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார் விருதுகளை வழங்கிப்பாராட்டினார். விஐடி கூடுதல்பதிவாளர் டாக்டர் பி.கே.மனோகரன், என்எஸ்எஸ் திட்ட அதிகாரி எஸ். பச்சைநாயகி, ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.ஜெ.பாலமுருகன், திட்ட அதிகாரி டாக்டர் எம்.எம். பாலமுரளி உள்ளிட்டடோர் உடன் உள்ளனர்.