சென்னை, ஜூன் 8- இந்தியாவில் மக்களால் அதிக வேகமாக பயணிக்கும் ரயில் என நம்பப்படும் வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யும் போது 180 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் ரயில் என அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது அதைவிட பாதி வேகத்தில் தான் பயணம் செய்து வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவலில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் மணிக்கு அதிகபட்சமாக 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியதாக அமைக்கப் பட்டு இருந்தது. பாதுகாப்பு காரணங்க ளுக்காக இந்த ரயில் அதிகபட்ச 160 கி.மீ. வேகத்தில் மட்டுமே பயணிக்கும் என்று தெரி விக்கப்பட்டிருந்தது. இதனால் இருநகரங் களுக்கு இடையேயான பயண நேரம் என்பது வெகுவாக குறையும் என்றும் கூறப்பட்டது. இதனால் மக்கள் பலர் இந்த ரயிலில் விரும்பி பயணம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் தற்போது 76.25 கி.மீ. குறைக் கப்பட்டுள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்திருக் கிறது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த 2020-21ஆம் ஆண்டில் வந்தே பாரத் ரயிலில் சராசரி வேகம் 84.48 கி.மீட்டராக இருந்தது. தற்போது இந்த 2023-24ஆம் நிதியாண்டில் இது 76.25 கி.மீட்டராக வேகம் குறைந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் அறிமுகம் செய்யும்போது 180 கி.மீ. வேகத்தில் செல்லும் என்று சொல்லப் பட்டது. ஆனால் தற்போது அதற்கு பாதி அளவு வேகத்திலேயே இயக்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டாலும் அந்த ரயில் செல்லும் பாதையில் ரயில்கள் வேக மாக செல்வதற்கான வசதிகள் இல்லை என்றும், அதற்கான பணிகள் நடந்து வருவ தாகவும், அந்த பணி நடப்பதால் தான் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டு வருவதாக வும் ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித் துள்ளது. வந்தே பாரத் ரயில்களை 160 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும் என்றாலும், பெரும்பாலான வழித்தடங்கள் அதற்கு ஏற்ற வகையில் இல்லாததால் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. இது ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.