சென்னை, ஜூன் 23- சென்னை பெருநகர கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் ஆவடி தொகுதி 21ஆவது மாநாடு மாவட்டத் தலைவர் மு.ராபர்ட்ராஜ் தலைமையில் தோழர் வி.பி.சிந்தன் நினைவகத்தில் ஞாயிறன்று (ஜூன் 23) நடைபெற்றது.
சங்கக் கொடியை பி.சதீஷ்குமார் ஏற்றினார். துணைத் தலைவர் ஆர். சுப்புராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் மா.பூபாலன் மாநாட்டை துவக்கி வைத்தார். செயலாளர் இ.கெங்கா துரை வேலை அறிக்கையை யும், பொருளாளர் சி.கோவிந்தசாமி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்டத் தலைவர் ஏ.நடராஜன், மாமன்ற உறுப்பினர் அ.ஜான் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயலாளர் பி.லூர்துசாமி மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.முன்னதாக துணைத் தலைவர் ஜெ.கனகராஜ் வரவேற்றார். துணைத் தலைவர் பி.கிருஷ்ண மூர்த்தி நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
பெண் தொழிலாளர்க ளுக்கு 55 வயதில் ஓய்வூ தியம் வழங்க வேண்டும், நலவாரிய ஆன்லைன் பதிவை எளிமையாக்க வேண்டும், கட்டுமான தொழிலாளி மனைவியின் மகப்பேறு நிதி ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும், இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
தலைவராக இ.கெங்கா துரை செயலாளராக ராபர்ட்ராஜ், பொருளாளராக சி.கோவிந்தசாமி உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.