tamilnadu

img

ஆகஸ்ட்- 9 இந்திய பாதுகாப்பு தினம்: அரசு ஓய்வூதியர் சங்கமும் பங்கேற்பு

சென்னை:
அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், அகில இந்தியமாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து ஆக.9 அன்று இந்திய பாதுகாப்பு தின இயக் கத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன.
பொதுத்துறைகள் தனியார்மயம், அரசு ஊழியர் அகவிலைப்படி முடக்கம், 151 ரயில் பாதைகள் தனியார்மயம், 14 கோடி பேரின் வேலை பறிபோனது, சிறு குறு தொழில்கள் பாதிப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் அகில இந்திய அளவில்நடைபெறுகிறது.

நாட்டைக் பாதுகாக்கின்ற இப்போராட்டத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கமும் பங்கேற்கிறது. அனைத்து மாவட்ட, வட்டங்களில் அனைத்து தொழிற்சங்கங்களோடு இணைந்து ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி, போராட்டங்களில்  பங் கேற்க மாவட்டக்குழுக்கள் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

;