விசாரணையில் திடுக்கிடும் தகவல்
கோவை, ஆக. 7- இலங்கையைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தலாளி அங்கொட லொக்கா கோவையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து உருவத்தை மாற்ற முயற்சி செய்தது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள் ளது. கோவையில், தலைமறைவாக இருந்த இலங்கையைச் சேர்ந்த சர்வதேச போதை பொருள் கடத்தலாளி அங்கொட லொக்கா மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் 7 தனிப்ப டைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், கோவை தனியார் மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு இருப்பதும், இந்த சிகிச்சையின் மூலம் தனது தோற்றத்தை மாற்ற முயற்சி செய்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், சேரன் மாநகர் பகுதி யில் உள்ள ஜிம்மிற்கு தினமும் சென்று உடற்பயிற்சி செய்வதை அங்கொட லொக்கா வழக்கமாக கொண்டிருந்ததை அடுத்து ஜிம் நிர்வாகிகள் மற்றும் ஜிம் அருகில் இருப்பவர்க ளிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.