அரசு மருத்துவமனையில் அலைக்கழிப்பு
திருவண்ணாமலை, நவ. 8- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த இளங்காடு ஏரியில் மீன் பிடித்ததாக கூறி இருளர் இன பழங்குடி மக்கள் தாக்கப் பட்டுள்ளனர். இதில் காயமடைந்தவர்கள், வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு அவர்களுக்கு முறையான சிக்சைசையளிக்காமல், அலைக்கழிக்கப் பட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். வந்தவாசி அடுத்த நடுக்குப்பம் பகுதி யில் பழங்குடியின மக்களான, வெள்ளிக் கண்ணு, எள்ளம்மாள், சுமதி உள்ளிட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்க ளுக்கு முன்பு, இளங்காடு ஏரியில் சுற்று வட்டார கிராம மக்கள் மீன்பிடித்துள்ளனர். அப்போது பழங்குடியின மக்களும் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். பழங்குடியின மக்கள் எப்படி மீன்பிடிக்கலாம் என, ஆதிக்கச் சாதியினர் இவர்களை அடித்து விரட்டியுள்ள னர். இதில் காயமடைந்தவர்கள் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவர்கள் கடும் அலைக் கழிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எலும்பு முறிவு கண்டறிய எக்ஸ்ரே பிரிவு செயல்படவில்லை. என்று செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இப்போது பரவலாக காய்ச்சல் நோய் பரவுவதால் நோயாளிகள் அதிக அளவு மருத்துவமனைக்கு வருகின்றனர். அவசர சிகிச்சை அளிக்காமல் முதலுதவி மட்டும் செய்து வேறு மருத்துவமனைக்கு அனுப்பு வதே அடிக்கடி நடப்பதாக நோயாளிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் வந்த வாசி வட்டச் செயலாளர் ஜா.வெ.சிவராமன் கூறியபோது, “வந்தவாசி வட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிக அளவு வசித்து வருகின்றனர். எனவே, அரசு மருத்துவமனை யில் தேவையான மருத்துவர்கள், படுக்கை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும், மருத்துவமனை வளாகத்தில் கால்நடைகள் சுதந்திரமாக உலா வுவதை தடுக்க வேண்டும். பழங்குடியின மக்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.