tamilnadu

பன்றி பிடிக்க வந்தவர்கள் மீது தாக்குதல்,வாகனம் உடைப்பு

பன்றி பிடிக்க வந்தவர்கள் மீது  தாக்குதல்,வாகனம் உடைப்பு

கடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கால்நடைகள் மற்றும் பன்றிகள் அதிக அளவில் சுற்றி திரிவதால் பொதுமக்களுக் கும், வாகன ஓட்டிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக தொடர்ந்து பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர்.  இந்த நிலையில், மாநகராட்சி மேயர்  சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் மாநகராட்சி  ஆணையாளர் அனு மேற்பார்வையில் கால் நடைகள் மற்றும் பன்றிகளை பிடித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், திங்களன்று (மார்ச் 3)  கடலூர் முதுநகர் சேடப்பாளையம் பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடிக்க மதுரை,  புதுக்கோட்டை மற்றும் கடலூர் பகுதிகளில் இருந்து வந்திருந்த 15 பேர் ஈடுபட்டனர். அப்போது, 20 பேர் கொண்ட கும்பல் அங்கு  திரண்டு வந்து, வாகனத்தை வழிமறித்து. திடீரென்று கற்கள் மற்றும் கழிகளை கொண்டு சரமாரியாக தாக்கி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 15 பேர் சென்ற வாகனத்தின் முன்பக்க கண்ணா டியை கற்கள் மூலம் வீசி தாக்கியும், டயர்களை வெட்டி சேதபடுத்தினர். இதன் மூலம் 15 பேரும் லேசான காயமடைந்தனர். அவர்களிடம் இருந்த செல்போன்களை பறித்து சென்றனர். இந்த நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இத்தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  பார்வையிட்டு விசாரணை மேற்கொண்ட னர்.