சென்னை, டிச. 24 - மலர் மருத்துவமனை யில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை அடையாறில் போர்ட்டீஸ் மலர் மருத்துவ மனை உள்ளது. இங்கு 120 பேர் ஊழியர்களாக பணி யாற்றுகின்றனர். இவர்க ளுக்கென்று போர்ட்டீஸ் மலர் மருத்துவமனை ஊழியர் சங்கம் (சிஐடியு) செயல்பட்டு வருகிறது. ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் நடை பெறும். 2019ம் ஆண்டிற்கான ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் ஊழியர் சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் எஸ்.ராஜப்பா, பொதுச் செயலாளர் ஐ.ஆர். ரவி, பொருளாளர் மோ கன்சிங், துணைத்தலை வர்கள் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, இன்பரசியும், நிர்வாகம் சார்பில் தலைமை அலுவலக அதிகாரி ரஞ்சன்பாண்டே, மண்டல இயக்குநர் சஞ்செய் பாண்டே, ஊழியர் நல இயக்குநர் நாகேஸ்வரன், மண்டல மனிதவள அதிகாரி வேணுமேனன், மனிதவள அதிகாரி செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். 8 சுற்றுகள் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு 17ந் தேதி ஒப்பந்தம் கை யெழுத்தானது. அதன்படி, ஊழியர்க ளுக்கு 3ஆயிரத்து 500 ரூபாய் முதல் 6 ஆயிரத்து 500 ரூபாய் ஊதிய உயர்வு கிடைக்கும். ஊழியர்க ளுக்கான மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்ற வற்றிற்கான கட்டணத்தை மருத்துவமனை நிர்வாகவே செலுத்தும். இவ்வாறு சங்கத்தின் பொதுச் செய லாளர் ஐ.ஆர்.ரவி கூறினார்.