tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

சூளை பேருந்து நிறுத்தத்தில்  நிழற்குடை அமைக்க கோரிக்கை

சென்னை, ஜூன் 26 - சூளை பேருந்து நிழற்குடை இடிக்கப்பட்ட இடத்தில், நவீன நிழற்குடை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக சிபிஎம் 58வது வட்ட கிளைச் செயலாளர் ந.மனோகரன், மேயர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், பெரு நகர சென்னை மாநகராட்சி, சூளை பேருந்து நிறுத்தம் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் புத னன்று (ஜூன் 26) அதி காலை பேருந்து நிறுத்தம் இடிக்கப்பட்டது. நிழற்குடை இடிக்கப்பட்டது குறித்து மாமன்ற உறுப்பினர் தனக்கு தகவல் தெரியாது என்கிறார். எனவே, இடிக்கப்பட்ட பேருந்து நிறுத்தம் இருந்த இடத்தில் நவீன பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பன்னோக்கு உயர் சிகிச்சை பிரிவு கட்டிடம்

சென்னை,ஜூன் 26- தமிழ்நாடு சுகாதார அமைப்பு சீர்திருத்த திட்டத்தின் கீழ் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டிடம் அமைக்கும் பணி ரூ.53 கோடி மதிப்பீட்டில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரி வித்துள்ளார்.

பள்ளி கல்வித்துறையில் மேல்நிலை மற்றும் உயர் நிலைப்பள்ளிகளில் மொத்தம் ரூ.1,644.89 கோடி மதிப்பீட்டிலான 3,864 கட்டுமான பணி களில் ரூ.362.31 கோடி மதிப்பீட்டிலான 1,032 பணிகள் முடி வடைந்துள்ளன. 1,469 பணிகள் ரூ.980.31 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன என்றும் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.