கிருஷ்ணகிரி, ஜூலை 9- ஓசூர் சிப்காட், அசோக் லேலண்டு, டிவிஎஸ் உள் ளிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பல தனியார் தொழிற் சாலைகளில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற தொழிலா ளர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். 38 ஆண்டுகள், 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும் 500, 1000 ரூபாய் என மிகக் குறைந்த ஓய்வூதியம் வாங்குபவர்களே பெரு மளவில் உள்ளனர். பல சிரிய தொழிற்சாலைகளில் ஓய்வூ தியம் என்றால் என்ன வென்று கூட தெரியாத நிலை உள்ளது. இந்நிலையில் இபிஎப் 95 ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கம், அசோக் லேலண்டு பணி ஓய்வு பெற்ற தொழிலா ளர்கள் நலச் சங்கம், டிவிஎஸ் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சங்கம் சார்பாக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமாரை சந்தித்து மனு அளித்தனர். தனியார் தொழிற் சாலை யில் பணி ஓய்வு பெற்றவர்க ளுக்கு குறைந்த பட்சம் மாத ஓய்வூதியம் ரூ. 9,000 வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மக்க ளவையில் சிபாரிசு செய்த குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 3,000 இடைகாலமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள வையிலும், தொழிலாளர் நல அமைச்சரிடமும், வலி யுறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் இதுகுறித்து வலி யுறுத்துவதாக உறுதி யளித்தார். இதில் நிர்வாகிகள் பனனீர்செல்வம், சுகுமார், ராமன், மூர்த்தி, ராஜீ, லஷ்மிகாந்தன், சின்னசாமி, கணேசன், சகாயராஜ், சிவ ராமன், கோபி, பூபதி ஆகி யோர் கலந்து கொண்டனர்.