சென்னை, ஆக. 20- சென்னை மாநகராட்சி 29ஆவது வட்டத்திற்குட் பட்டது பொன்னியம் மன்மேடு. கணக்கன் சத்திரம் பகுதி. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மூலக்கடையில் இருந்து செங்குன்றம் செல்லும் சாலையில் 1 கி.மீ. தூரத்தில் உள்ளது. கணக்கன் சத்திரம் பகுதியைச் சுற்றி பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகர் ஏ,பி,சி மற்றும் இ பிளாக்குகள், பிரகாஜ் நகர், விஜிபி நகர், விபிசி நகர், சாஸ்திரி நகர், மாத வரம், கண்ணபிரான் நகர், கல்கத்தா ஷாப், திடீர் நகர் உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. அங்கு பல்லாயி ரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர்.
மேலும் இந்த பகுதியில் புனித அன்னாள் மகளிர் கல்லூரி, திரு குடும்ப தேவாலயம், மாருதி சர்வீஸ் சென்டர், பர்வீன் டிராவல்ஸ், கனரக சரக்கு வாக னங்கள் நிறுத்துமிடம், சதர்ன் அலாய் பவுண்டரி, டாஃபே நிறுவனம், தொழில் பயிற்சி கூடம் உள்ளிட்ட பல சிறு குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் உரிய சிக்னல் விளக்கு கள் பொறுத்தப்படாததால் மக்கள் அச்சத்துடனே சாலையை கடக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து அங்கு வசிக்கும் சுந்தரசோழன் என்பவர் கூறுகையில், “கணக்கன் சத்திரம் தேசிய நெடுஞ் சாலை சந்திப்பில் 2 பெட்ரோல் பங்கு கள் உள்ளன. மேலும், அந்த பகுதி யில் உள்ள நிறுவனங்களுக்கு சொந்த மான வாகனங்கள், அந்த நிறுவனங் களுக்கு வரும் கனரக வாகனங்களை சாலையின் இரண்டு பக்கமும் நிறுத்தி விடுகின்றனர். இதனால் கணக்கன் சத்திரம் சந்திப்பில் தினமும் ஒரு விபத்தாவது ஏற்படுகிறது”என்றார்.
இங்கு சிக்னல் விளக்கு அமைக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தி, போக்குவரத்து காவல் உதவி ஆணை யரிடம் மனு அளிக்கப்பட்டது. பொன்னியம்மன்மேடு பெரிய சாலை மற்றும் இணைப்பு சாலை குடியிரு ப்போர் நலச்சங்கம் சார்பில் சென்னை போக்குவரத்து ஆணையர் அலுவல கத்திலும், போக்குவரத்து ஆய்வாளரி டம் மனு அளிக்கப்பட்டது. மேலும் சட்ட மன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம், மக்களவை உறுப்பினர் சசி காந்த செந்தில் இடமும் முறை யிட்டுள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
சாலை விபத்தில் ஏற்படும் உயிரி ழப்பை தடுக்க உடனடியாக தேசிய நெடுஞ்சாலை கணக்கன் சத்திரம் சந்திப்பில் சிக்னல் விளக்கு அமைக்க வேண்டும். இதுவரை அங்கு 2 போக்குவரத்து காவலர்களை நிய மித்து வாகனங்கள் முறையாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.