tamilnadu

img

கொளத்தூர் எவர்வின் பள்ளியில் கொரோனாவைரஸ் விழிப்புணர்வு

சென்னை, மார்ச் 14- சோப்பு போட்டு கை கழுவுவதன் அவசி யத்தை வலியுறுத்தி சென்னை கொளத்தூர் எவர்வின் பள்ளியில் கொரோனாவைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி மைதானத்தில் 10,000 சதுர அடி பரப்பில் 25,000 சோப்புகளைப் பயன்படுத்தி கை கழு வுதலை மாணவர்கள் வடிவமைத்தனர். மேலும், கை கழுவுங்கள், நீண்ட காலம் வாழுங்கள் என்ற பொருள்படும்படி ஆங்கி லத்தில் வாசகங்களை அமைத்தனர். மேலும், “கை கழுவுங்கள்100 ஆண்டு வாழுங்கள்”, சுத்தம் சோறு போடும் சுத்தம் ஆயுள் கூட்டும், ஆரோக்கிய உணவு முறை  ஆரோக்கிய வாழ்வு, உலகத்தை பிரித்த  கொரோனா வைரசை உலகமே சேர்ந்து  ஒழித்துக் கட்டுவோம் போன்ற கொரோனா வைரஸ் குறித்த வாசகங்களை உள்ள டக்கிய பதாகைகளை மாணவர்கள் கையில்  ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில்.பள்ளியின் சி.இ.ஓ. மகேஸ்வரி, சீனியர் முதல்வர் புருஷோத்த மன், முதல்வர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.