tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, வருமானம், வருமானமில்லா, வாரிசு சான்றுகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வடசென்னை மாவட்டம் சார்பில் பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில்  திங்களன்று (மார்ச் 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் ரா.ஜெயச்சந்திரன், செயலாளர் கி.ராதை, ஒருங்கிணைப்பாளர் எஸ்.ராணி, பெரம்பூர் பகுதித் தலைவர் நடராஜ், செயலாளர் ராஜி, பொருளாளர் முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.