tamilnadu

குற்றவாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய உதவி ஆய்வாளர்

வேலூர், ஜூலை 1- வேலூரில் ஆள்கடத்தல், செயின் பறிப்பு, குற்றவாளிகளு டன் காவல் உதவி ஆய்வாளர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் மதுவிலக்குப் பிரிவில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் செல்வராஜ். இவர் வேலூ ரில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசிக்கிறார்.  இவர் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இரவில் கஸ்பாவில் உள்ள  ஆயுதப்படை காவலர் குடியிருப்புக்கு செல்லும் வழியில் சாலையிலேயே தனது நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார். அப்போது செயின் பறிப்பு, ஆள்  கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய சிலரும் உடனி ருந்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், காகிதப்பட்டறையில் நிதிநிறுவன உரிமையாளர் நந்தகுமார் (24) என்பவர் கடந்த மே மாதம் 7ஆம் தேதி கடத்தப்பட்ட வழக்கில் தொரப்பாடியை சேர்ந்த கருப்பு ஜெகதீஷ், ஸ்கெட்ச்  பரத், தமீம் ஆகியோருக்கு தொடர்புள்ளது. 7ஆம் தேதி  நந்தக்குமாரை கடத்துவதற்கு முன்பு 3ஆம் தேதி இரவு உதவி ஆய்வாளர் பிறந்தநாள் விழாவில் 3 பேரும் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் கருப்பு ஜெகதீஷ் என்பவர் செயின் பறிப்பு வழக்கில் கைதானவர் என்றனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிர வேஷ்குமார் கூறுகையில்,  உதவி ஆய்வாளர் பிறந்தநாள்விழா வில் குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் கலந்து கொண்டதாக புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து  விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.