tamilnadu

img

ஏழு ஏஎஸ்பிக்களுக்குப் பணி ஒதுக்கீடு

சென்னை:
தமிழகத்தில் ஏழு ஏஎஸ்பிக்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு வருமாறு:"ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ், வேலூர் மாவட்டம், வேலூர் உதவி கோட்ட ஏஎஸ்பியாகவும், சமய் சிங் மீனா ஐபிஎஸ், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் உதவி கோட்ட ஏஎஸ்பியாகவும், ஆதர்ஷ் பச்சேரா ஐபிஎஸ், செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு உதவி கோட்ட ஏஎஸ்பியாகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

புக்யா சினேகா பிரியா ஐபிஎஸ், கடலூர் மாவட்டம், நெய்வேலி உதவி கோட்ட ஏஎஸ்பியாகவும், தீபக் சைவாக் ஐபிஎஸ், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் உதவி கோட்ட ஏஎஸ்பியாகவும், ஹர்ஷ் சிங் ஐபிஎஸ், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் உதவி கோட்ட ஏஎஸ்பியாகவும், டி.வி.கிரண் ஸ்ருதி ஐபிஎஸ், திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை உதவி கோட்ட ஏஎஸ்பியாகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்"இதற்கான உத்தரவை அரசின் முதன்மைச் செயலர் (முழு கூடுதல் பொறுப்பு) எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;