சென்னை, பிப். 10 - சென்னை கே.கே.நகர் பணிமனையில் பேருந்து ஓட்டுநரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர். கே.கே.நகர் பணி மனையில் இருந்து கே.கே.நகர் - அண்ணாசதுக்கம் இடையே 12ஜி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த 18 பேருந்துகளை 9ஆகவும், 11ஜி வழித்தடத்தில் இயக்கப் பட்டு வந்த 8 பேருந்துகளை 6 ஆகவும், நிர்வாகம் குறைத்துவிட்டது. 49ஏ வழித்தடத்தில் இயங்கி வந்த 13 பேருந்துகளையும் முழுமையாக ரத்து செய்து வேறு வழித்தடத்தில் இயக்கு கின்றனர். வருவாய் குறைவை காரணம் காட்டி அடிப்படையான ஒரு வழித் தடத்தில் 25 பேருந்துகளை நிர்வாகம் ரத்து செய்துள் ளது. இதனால், கே.கே.நகர், எம்ஜிஆர் நகர், அசோக் பில்லர், தி.நகர் மார்க்கத்தில் செல்லும் பேருந்துகளில் பயணிகளின் அடர்த்தி அதி கரித்துவிட்டது. இதனால் பயணிகள் படிகளில் தொங்கிக் கொண்டு செல் கின்றனர். இதன் காரணமாக ஓட்டுநர்கள், பேருந்துகளின் கதவுகளை மூடுவதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரி விக்கின்றனர். பேருந்து கதவு களை மூடாவிட்டால் நிர்வா கம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறது. இதனால் பயணி களுக்கும், ஓட்டுநர்களுக்கும் அவ்வப்போது சர்ச்சை ஏற்படுகிறது. இந்நிலையில் திங்க ளன்று (பிப்.10) காலையில் கே.கே.நகர் பணிமனையிலி ருந்து 12ஜி பேருந்தை ஓட்டு நர் மனோகர் இயக்கி யுள்ளார். அப்போது பயணி களும், மாணவர்களும் பேருந்து கதவை மூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட சர்ச்சை யில் மாணவர்கள் சிலர் ஓட்டு நரை தாக்கியதாக தெரி கிறது. தாக்குதலுக்கு உள்ளான ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனிடையே ஓட்டுநரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பணிமனை யில் ஊழியர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். ஓட்டுநர் மனோகர் அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து, விசாரணை நடந்து வருகிறது.