சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-க்கு எதிராக மயிலாப்பூரில் நடைபெற்று வரும் ஷாகின்பாக் போராட்டத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர் பேரா.அருணன் கலந்து கொண்டு பேசினார். சென்னை மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார், சிபிஎம் மயிலை பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.