tamilnadu

மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் சட்டத்தில் கைது

 சென்னை,மே 28- மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப் படுவார்கள் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் மாஞ்சா நூல் பட்டம் விடு வதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனையும் மீறி சிலர் பட்டம் விடுவதால் உயிரிழப்பு நிகழ்கிறது. ஊரடங்கு காலத்தில் மாஞ்சா நூல் பட்டம் விடுவது அதிகரித்துள்ளதாக கூறப்படு கிறது. சென்னையில் மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலில் பட்டம் விட மேலும் 2 மாதங்களுக்கு தடை நீட்டிக்கப்பட் டுள்ளது. ஜூலை 16 ஆம் தேதி வரை மாஞ்சா நூலுக்கு தடை விதித்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் படுவர் என்று மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத் துள்ளார். சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விட்ட 80 பேர் கைது செய்யப்பட் டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

;