tamilnadu

img

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை,அக்.3- பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் மீது 5 ஆயிரத்திற்கும்  அதிகமான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை  எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார் தாக்கல் செய்தனர். பகுஜன் சமாஜ் மாநில முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . இதில் 25 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.